திருடச் சென்றவர்களில் இருவருக்கு விளக்கமறியல்!

227 0

திருகோணமலை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடச் சென்ற இருவர் தப்பியோடிய நிலையில் கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

திருகோணமலை நீதிமன்ற  நீதவான் முன்னிலையில் இன்று (17) இரண்டு சந்தேக நபர்களையும்  முன்னிலைப் படுத்திய போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் திருகோணமலை-பூம்புகார் வீதியைச் சேர்ந்த ஜமால் முஹம்மது பாஹீம் (28வயது) மற்றும் அதே இடத்தைச் சித்திரவேல் கஜேந்திரன் (30வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை சீமெந்து தொழிற்சாலைக்குள் அனுமதி இன்றி நான்கு பேர் உள் நுழைவதை  சி.சி.டி.வி கெமராவின் மூலம் பாதுகாப்பு பிரிவினர் அவதானித்ததையடுத்து  பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் திருடர்களை சுற்றிவளைத்தனர்.

இதனையடுத்து நான்கு பேரில் இருவர் தப்பியோடிய நிலையில் இருவரை பாதுகாப்பு பிரிவினர் பிடித்து சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடச்சென்றமை தெரியவந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் மற்றைய  இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.