அரபு மொழியால் நாட்டில் பெரும் பிரச்சினை – மனோ

292 0

அரபு மொழி தனிப்பட்ட பாவனைக்கானது என்பதை சில முஸ்லிம் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் என மனோ கணேசன் குறிப்பிட்டார்.

அரபு மொழி இந்த நாட்டிலே பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி இருக்குகின்றது. ஆனால் அது நாட்டின் மொழியல்ல.

பள்ளிவாசல்களில் அரபி மொழியினை பயன்படுத்த முடியும். ஆனால் நாட்டில் ஏற்றுக்கொள்ளாத ஒரு மொழியை பகிரங்கமாக பயன்படுத்தும் போது சிங்கள மக்களிடத்திலே சந்தேகங்களை ஏற்படுத்தி அப்பாவி முஸ்லிம்கள் மீதான சந்தேகத்தை அதிகரிக்கின்றது.

மேடைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வீரக்கதை பேசும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் அரபு மொழி தனிப்பட்ட பாவனைக்கானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.