திமுக முன்னாள் எம்.பி சிவசுப்பிரமணியன் காலமானார்!

231 0

அரியலுர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. முன்னாள் எம்.பி.யான சிவசுப்பிரமணியன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.பி.யான இவர், முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார்.
சிவசுப்பிரமணியன் 1998-2004ம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். மேலும், 1989ம் ஆண்டில் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சொந்த ஊரான ஆண்டிமடத்தில் வைக்கப்பட்டு உள்ளது.