பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முறையற்ற செயற்பாட்டினூடாக சபாநாயகர் கரு ஜயசூரிய முத்துறைகளிலும் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றம்சாட்டியுள்ளார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதாக குறிப்பிட்டுக் கொண்டு அமைத்த பாராளுமன்ற தெரிவு குழுவின் ஊடாகவே பல பிரச்சினைகள் தற்போது ஏற்பட்டுள்ளது.
தெரிவு குழுவில் சாட்சியங்கள் அனைத்தும் ஜனாதிபதிக்கு எதிராக அமைந்துள்ளமையினால் அவர் அமைச்சரவையினை கூட்டாமல் அரசியல் நெருக்கடியினை ஏற்படுத்த முனைகின்றார். இப்பிரச்சினைகள் அனைத்திற்கும் சபாநாயகரே பொறுப்பு கூற வேண்டும்.
அத்துடன் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜனாதிபதியும், பிரதமரும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளமை பொருத்தமற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.