இலஞ்சம் கொடுக்க முயற்சித்த சந்தேகநபருக்கு விளக்­க­ம­றியல் நீடிப்பு

303 0

ஹொரவப்பொத்தானை பகு­தியில் தௌஹீத் ஜமா­அத்­துடன் தொடர்­பினை பேணி­ய­தாக கைது செய்­யப்­பட்ட சந்­தேகநபரை விடு­விப்­ப­தற்­காக ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிக்கு இலஞ்சம் கொடுக்க முயற்­சித்­த­தாக குறிப்­பிட்டு கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர் எதிர்­வரும் 18 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

சந்­தேகநபர் நேற்­றைய தினம் கொழும்பு பிர­தான நீதவான் லங்கா  ஜய­ரத்ன முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­துடன், சந்­தேகநபரின் வழக்­க­றிஞர் சந்­தேக நபரை விடு­தலை செய்­யு­மாறு கேட்டுக் கொண்ட போதும் சந்­தேகநபரை நீதிவான் எதிர்­வரும் 18 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார்.

தௌஹீத் ஜமாஅத்தின் தொடர்பை பேணிய சந்­தேகநபரை விடு­விக்­கு­மாறு கூறி ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிக்கு 2 இலட்­சத்து 50 ஆயிரம் ரூபா  பணத்தை இலஞ்­ச­மாக கொடுக்க முயற்­சித்த குற்­றச்­சாட்டில்  சந்­தேகநப­ரொ­ருவர் கடந்த மே மாதம் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இவருக்கான விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.