ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது

297 0

ஜாஎல களு பாலத்திற்கு அருகில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலான ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 11 கிராமும் 550 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

ஜாஎல பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.