மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டமையானது இனவாத கருத்துகளையோ, மதவாத கருத்துகளையோ பரப்புவதற்காக அல்ல என்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நேற்று (11) நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தீவிரவாதம் உருவாகுவதற்கான அடிப்படை காரணம், மக்கள் பிரதிநிதிகள் இனம், மதம் பற்றிய கருத்துகளை வைத்துக்கொண்டு அரசியலில் ஈடுபடுவதுதான் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.