அகுரஸ்ஸ தெனியாய பிரதான வீதியின் ஹுலங்தாவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளதாக அகுரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெனியாய நோக்கிப் பயணித்த இரண்டு பஸ்களின் சாரதிகள் போட்டிக்கு பஸ்களை செலுத்தியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகக் குறித்த பஸ்களில் பயணித்த பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த விபத்தில் காயமடைந்த 15 பேர் அகுரஸ்ஸ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு , மேலும் இருவர் மொரவக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அகுரஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் 6 பேர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்தவர்களில் விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதியும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் அகுரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.