மாளிகாவத்தையில் தந்தை தாக்கி மகன் பலி

222 0

தந்தையால் தாக்கப்பட்டு மகன் உயிரிழந்த சம்பவமொன்று கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்யை தினம் மாளிகாவத்தை பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தந்தையொருவர் அவரது மகன் மற்றும் மனைவி மீது மேற்கொண்ட தாக்குதலினால் படுகாயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது படுகாயமடைந்த 17 வயதுடைய குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், அவரது தாயார் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந் நிலையில் தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.