பிரபல தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எலின் நிறுவனர் ஷிவ் நாடார். இவர், தான் படித்த அரசு பள்ளியையே தத்தெடுத்து அல்ட்ரா மார்டன் பள்ளியாக மாற்றியுள்ளார். இது குறித்த சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.
தான் படித்த பள்ளிக்கு மேசை வாங்கி தருவது, கட்டிடம் கட்டித்தருவது என சிறு சிறு உதவிகளை செய்யும் முன்னாள் மாணவர்களை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆண்டுதோறும் அமெரிக்காவின் பிரபல நாளிதழ் ஒன்றில் வெளியாகும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்று விடுவார் ஷிவ் நாடார். இவர் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எலின் நிறுவனராவார்.

இந்த பள்ளிக்கு ஷிவ் நடார் என்ன செய்தார்? எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி ரூ.15 கோடி செலவில் மேல் தளங்கள் கட்டிக் கொடுத்துள்ளார். மேலும் பள்ளியை முழுவதுமாக தத்தெடுத்து பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளார்.


இதனால் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும் அப்பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆண்கள் பள்ளியாக இருந்த இப்பள்ளியில் இந்த ஆண்டு முதல் பெண்களும் சேர்க்கப்பட உள்ளனர்.
இது மட்டுமின்றி அப்பள்ளியை பராமரிக்க 15 பேரை தானே நியமித்துள்ளார் ஷிவ். பழமை மறவாத ஷிவ் நாடாருக்கு அனைத்து தரப்பு மக்களும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

