தம்மை கொல்ல வந்த தேவதத்தருக்குக்கூட விகாரையை புத்தபெருமான் தடை செய்யவில்லை. அந்த உன்னதமான பாதையை புரியாத முட்டாள் தேரர்கள் துன்பத்திலிருந்து நீங்கி சுகம்பெறட்டும். கவலையிலிருந்து நீங்கட்டும் என்று அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட விகாரைகளில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர மற்றும் சதுர சேனாரத்ன எம்.பி. ஆகியோர் நிகழ்வுகளில் கலந்துகொள்ளக்கூடாதென கம்பஹா மாவட்ட சங்க சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் அமைச்சர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.