பாகிஸ்தான் குடும்பத்தை நாடு கடத்த வேண்டாம்-மன்னிப்புச்சபை

285 0

விசா காலாவதியான பின்னரும் தங்கியிருந்தமைக்காக கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் குடும்பத்தை நாடு கடத்த வேண்டாமென்று இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கேட்கப்பட்டுள்ளது.

11 – 57 வயதிற்குட்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தானிய கத்தோலிக்கக் குடும்பம் அவர்களது நாட்டில் உயிர் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கிய காரணத்தினால் தப்பியோடி வந்து இலங்கையில் தஞ்சம் கோரியது.

இப்போது அந்தக் குடும்பம் வருந்ததக்க சூழ்நிலைகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களை உடனடியாக நாடு கடத்துவதற்கான திட்டங்கள் இருப்பதாகவும் அறியவருவதாக சர்வதேச மன்னிப்புச்சபை கூறுகிறது.

இந்தக் குடும்பத்தினரைப் பலவந்தமாக பாகிஸ்தானுக்குத் திருப்பியனுப்புவது அவர்களை ஆபத்திற்குள் தள்ளுவதாகவே அமையும். ஏனெனில் அண்மையில் அங்கு சிறுபான்மையினரின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.