நல்லாட்சி நீடித்தால் தீவிரவாதிகள் நாட்டை ஆக்கரமித்து விடுவார்கள் – பவித்ரா

297 0

மைத்திரி-ரணில் ஆகியோரின் முறையற்ற நிர்வாகம் மற்றும் அரசியல் போட்டித் தன்மை காரணமாகவே சர்வதேச தீவிரவாதம்  நாட்டுக்குள்  ஊடுறுவியது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி, இவ் விருவரின் ஆட்சி மீண்டும் தொடர்ந்தால்  ஐ.எஸ். தீவிரவாதிகள் அரசாங்கத்தின் ஆதரவுடன் நாட்டை ஆக்கிரமித்துக் கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனநாயகம், தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதாக குறிப்பிட்ட  நல்லாட்சி அரசாங்கத்தில் இவையிரண்டும் முழுமையாக  கிடைக்கப் பெற்றதா எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.