உண்ணாவிரதத்தை கைவிட்டார் ரத்தன தேரர்

300 0

பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டதாக அறிவித்துள்ளார்.

ஆளுநர்களான அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இராஜினாமா செய்ததை தொடர்ந்து அவர் தனது உண்ணாவிரதத்தை கைவிடுவதாக தெரிவித்துள்ளார்.

தீவிரவாத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், ஆளுநர்களான அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி விலகுமாறு வலியுறுத்தி அதுரலியே ரத்தன தேரர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்திவந்தமை குறிப்பிடத்தக்கது.