கொழும்பு பம்பலப்பிட்டி , கறுவாத்தோட்டம் பகுதிகளில் மழைநீர் வடிந்தோடுவதற்காக சுரங்க வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மூன்று மாதங்களுக்கு குறித்த பகுதிகளில் உள்ள விதிகளில் வாகனங்களின் போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது.
பிலிப்குணவர்த்தன மாவத்தை விளையாட்டுதுறை அமைச்சிற்கு அண்மித்த துன்முல்ல சுற்றுவட்டபாதை வரையும் , பிலிப்குணவர்த்தன மாவத்தை சந்தி தொடக்கம் ஸ்ரான்லி விஜசுந்தரமாவத்தை , இலங்கை மன்றச்சந்தி வரையிலான பகுதிக்கும் கலேல் ஆபர் பகுதி காலி வீதி , கடற்கடை வீதி வரையிலான பகுதிகளிலேயே வீதிப்போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.
இந்த மூன்று மாத காலப்பகுதியில் வாகனசாரதிகள் சிரமத்தை எதிர்நோக்காத வண்ணம் மாற்றுவழிகளை பாவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்ரான்லி விஜயசுந்தர மாவத்தையின் ஒருபகுதிக்கு செல்லும் வாகனங்கள் மாத்திரம் ( பிலிப் குணவர்தன மாவத்தை ஊடாக பௌத்தாலோக மாவத்தை வரை ) எதுவித தடையுமின்றி பயணிக்க முடியும்.
பௌத்தாலோக மாவத்தையிலிருந்து ஸ்ரான்லி விஜசுந்தரமாவத்தை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் பௌத்தாலோக மாவத்தை , துன்முல்ல சந்தி ஊடாக சுதந்திர சுற்றுவட்டதினூடாக பிலிப்குணவர்த்தன மாவத்தைப குதியை சென்றடைய முடியும்.

