வைத்­தி­ய­ருக்கு எதி­ராக குரு­ணாகல் வைத்­தி­ய­சா­லைக்கு முன்­பாக ஆர்ப்­பாட்டம்

320 0

குரு­ணாகல் வைத்­தி­ய­சா­லைக்கு முன்­பாக நேற்று  ஆர்ப்­பாட்டம் இடம்­பெற்­ற­தை­ய­டுத்து இங்கு பர­ப­ரப்­பான நிலைமை உருவாகியுள்ளது.

வருமானத்தை மீறி சொத்துச்சேர்த்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்­பட்டு,கைது­செய்­யப்­பட்­டுள்ள மகப்­பேற்று வைத்­தியர் சேகு சிஹாப்டீன் மொஹமட் ஷாபிக்கு எதி­ரா­கவே இந்த ஆர்ப்பாட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது

“வைத்­தியர் சேகு சியாப்டீன் மொஹமட் ஷாபி மீதான விசாரணைக­ளுக்கு அரச தரப்பால் அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்­றது.

அத்­துடன்,விசா­ரணை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும் வைத்தியர் சரத் வீர­பண்­டா­ர­வுக்கு இட­மாற்றம் வழங்க சுகா­தார அமைச்சு முயற்­சிக்­கின்­றது.இதை நாம் வன்­மை­யாகக் கண்டிக்கின்றோம். வைத்­தியர் ஷாபிக்கு உச்­ச­பட்ச தண்­டனை வழங்­கப்­பட வேண்டும்” என்று ஆர்ப்­பாட்­டத்தில் பங்கேற்றுள்ளவர்கள் கோஷம் எழுப்­பினர்.

தேரர்கள் உட்­பட நூற்­றுக்­க­ணக்­கானோர் இந்த ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.

இந்த ஆர்ப்­பாட்டம் கார­ண­மாக குரு­ணாகல் பகு­தி­யி­லுள்ள கடைகள் மூடப்­பட்டு, தீவிர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டம் காரணமாக இப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.