பமுனுகம, அலேன்எகொட பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி 2தனது கடமைகள் நிறைவடைந்த பின்னர் நீச்சல் குளத்தில் நீராடுவதற்காக சென்ற வேளை நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் நீரில் மூழ்கிய நிலையில் பமுனுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.
கடான, கிம்புலாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், துன்கல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.