முஸ்லிம் வைத்தியர் ஏன் குறித்த வைத்தியசாலையில் சிக்கல்படுத்தப்படுகிறார்- அசாத் சாலி

389 0

குருணாகல் வைத்தியசாலையில் சேவையாற்றிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள வைத்தியர் தொடர்பிலான சரியான தகவல்கள் விரைவில் வெளிவரும் என மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்தார்.

இன்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஆளுநர் இதனைக் கூறினார்.

இந்த வைத்தியசாலையில் குறித்த வைத்தியர் தொடர்பில் அதிகம் அலட்டிக் கொள்ளும் முக்கிய பொறுப்பில் உள்ளவர், முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் ஆதரவாளர் ஆவார்.

அதேபோன்று இந்த வைத்தியர் தொடர்பில் முந்தியடித்துக் கொண்டு விசாரணை மேற்கொள்ளும் பொலிஸ் உயர் அதிகாரியின் மனைவி இந்த வைத்தியசாலையில் வைத்தியர் ஆவார். இது தான் அந்த வைத்தியர் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களின் பின்னணி எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

ஒருவருக்கு ஒரு சத்திரசிகிச்சை செய்யும் போது அந்த நோயாளியிடம் குறைந்தது நான்கு வைத்தியர்கள் இருத்தல் வேண்டும் என ஜனாதிபதியும் அண்மையில் கூறியிருந்தார். அவ்வாறு இருக்கையில் இதனை இரகசியமாக இந்த வைத்தியர் எவ்வாறு செய்வார். இது குறித்த உண்மைகள் மிக விரைவில் வெளிவரும் எனவும் ஆளுர் மேலும் கூறினார்.