மரம் விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

285 0

புத்தல பொலிஸ் பிரிவில் மககொடயாய பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது மரம் ஒன்று விழுந்ததில் அவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் அந்த மரத்தை இயந்திரத்தினால் வெட்டிக் கொண்டிருக்கும் போது மரம் சாய்ந்து விழுந்துள்ளதால் கிளையொன்றுக்கு கீழ்ப்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.

மதுரகெட்டிய, மொனராகல பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் விவசாய திணைக்களத்தில் வௌிக்கல உத்தியோகத்தராக பணியாற்றக் கூடியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் மொனராகலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், புத்தல பொலிஸார் அடுத்த கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.