வங்கதேசத்தை சேர்ந்த பயங்கரவாத அமைப்புக்கு மத்திய அரசு தடை

277 0

வங்கதேசத்தை சேர்ந்த ‘ஜமாத்-உல்-முஜாகிதீன் வங்காளதேசம்’ என்ற பயங்கரவாத அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்திய ‘ஜமாத்-உல்-முஜாகிதீன் வங்காளதேசம்’ என்ற அந்த நாட்டை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு இந்தியாவிலும் சில தாக்குதல்களை அரங்கேற்றி இருக்கிறது.

ஜமாத்-உல்-முஜாகிதீன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் இயங்கி வரும் இந்த அமைப்புக்கு மத்திய அரசு தற்போது தடை விதித்து உள்ளது. இந்த தகவலை உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.