வெளிநாட்டு பிரஜைகளை வவுனியாவில் குடியமர்த்துவதை ஏற்க முடியாது – மஸ்தான்

471 0

வெளிநாட்டு பிரஜைகளை வவுனியாவில் குடியமர்த்துவதை ஏற்க முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “வெளிநாட்டு பிரஜைகளை வவுனியாவில் குடியமர்த்த இடம்கொடுக்க முடியாது. தற்காலிகமாக அவர்களை தங்க வைப்பது தொடர்பாக அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். எனினும் அவர்களை இங்கு குடியமர்த்துவதால் இங்குள்ள மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுமாயின் அதனை நாம் எதிர்ப்போம்.

இந்தியாவில் இலங்கை அகதிகள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு இதுவரையில் இந்திய பிரஜாவுரிமை வழங்கப்படவில்லை. அதேபோன்று இலங்கையிலும் அவ்வாறான சட்டத்திட்டங்கள் இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.