ஆறாத சோகம் தீராத துயரம்!

431 0

அது,ஆறாத சோகம். தீராத துயரம். அந்த இழப்­புக்கள் ஆழமானவை. மிக­மிக ஆழ­மா­னவை. அந்த சோகத்­தையும், துயரத்தையும் இழப்புக்களையும் மீட்­டுப்­பார்க்க நெஞ்சம் பதைபதைக்கும்.

 

அந்தப் பதை­ப­தைப்பு அடி மனம் வரையும் பாய்ந்து அப்­ப­டியே உலுக்கி எடுக்கும். முள்­ளி­வாய்க்­காலில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் நிலைமை இதுதான்.

முள்­ளி­வாய்க்கால் பேர­வலம் நடந்து பத்து வரு­டங்கள் ஓடிவிட்டன. அந்தப் பாதிப்­புக்கள் குறித்து பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மீட்­டுப் ­பார்க்­கவே விரும்­பு­வ­தில்லை. ஆனால் அந்த நினை­வுகள் நன­வு­க­ளாக எந்­தெந்த சந்­தர்ப்­பங்­களில் மேலெ­ழுந்து மெய்நடுங்கி மனம் நோகச் செய்யும் என்­பது அவர்கள் எவ­ருக்­குமே தெரி­யாது.

கதைப் போக்கில் முள்­ளி­வாய்க்கால் பற்றி பிரஸ்­தா­பித்­தாலே போதும். அங்கு நடந்த கோரக்­காட்­சிகள் மனங்­களில் வாழ்­வி­ய­லாக விரிந்து நடுங்கச் செய்யும். ஆற்­றா­மையும், இய­லா­மையும் ஆட்கொள்ள இதயம் அசுர வேகத்தில் துடிக்கும். தலை­க­னத்து சம்மட்­டியால் அடித்­தது போன்று இடிக்கத் தொடங்­கும். என்னவோ செய்­வது போல வயிறு கனத்து, கலங்கி ஏதேதோ நினை­வுகள் மனதில் முட்டி மோதும்.

பத்து வரு­டங்கள் என்ன, நூறு வரு­டங்கள் கடந்­தாலும், முள்ளிவாய்க்கால் நினை­வுகள் மனங்­களில் இருந்து மறைந்து போகாது. அந்த அள­வுக்கு முள்­ளி­வாய்க்கால் துய­ரங்கள் சக்தி வாய்ந்­தவை. அந்த நினை­வு­களில் சிக்கி காலச்­சக்­க­ரத்தில் சென்­றது போன்று அன்­றைய வாழ்­வி­ய­லுக்கே சிலர் ஆளா­கி­வி­டு­வ­துண்டு.

உள­வியல் ரீதி­யான முள்­ளி­வாய்க்கால் துய­ரங்கள் பாதிக்கப்பட்டவர்கள் மத்­தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்­கின்­றன. அந்தத் துய­ரத்தை ஒரு கூட்டு நிகழ்­வாக நினை­வு­கூர்ந்து, அழுது, அரற்றி, ஆற்­றிக்­கொள்­வ­தற்கு அவர்­க­ளுக்கு இன்­னுமே சந்­தர்ப்பம் சரி­யாகக் கிட்­ட­வில்லை.

துயரம் கார­ண­மாகத் துவண்டு போகின்ற மனங்­க­ளுக்கு உள ஆற்றுப்­ப­டுத்தல் மிகமிக அவ­சியம். தன்­னோடு பாதிக்­கப்­பட்ட ஏனை­ய­ உறவு­க­ளுடன் மனந்­தி­றந்து பேசி, அந்த கூட்டுத் துய­ரத்தில் தமது கவ­லை­க­ளையும், துன்­பங்­க­ளையும், இழப்­புக்­க­ளையும் பகிர்ந்து கொண்டு ஆறுதல் பெறு­வ­தற்­காக பாதிக்கப்பட்டவர்களின் உள்­ளங்கள் இன்னமும் ஏங்கிக் கொண்டிருக்­கின்­றன.

முள்­ளி­வாய்க்கால் அவ­லத்தில் சிக்கித் தவித்­த­வர்கள் இந்த உளவியல் பாதிப்பில் இருந்து மீள முடி­யாத­வர்­க­ளா­கவும், அந்த துன்­பக்­கி­டங்கில் இருந்து மேலெ­ழுந்து வர முடி­யா­த­வர்­க­ளா­கவும் சமூ­கத்தில் காணப்­ப­டு­கின்­றார்கள்.

அங்கு அரச படைகள் நடத்­திய கோர தாண்­ட­வத்­தின்­போது, பெற்ற­வர்கள், பிள்­ளைகள் மற்றும் உற்­ற­வர்கள் உடல் சிதறி உயிரிழந்து போக, அந்த இழப்­பின்­போது அழுது அரற்றி, துன்பத்தை வெளிப்­ப­டுத்தி, மனம் கசிந்து, கண்ணீர் உகுத்து, பலருக்கும் அவர்­களை அடக்கம் செய்ய முடி­யாமல் போனது.மழை­யென பொழிந்த எறி­க­ணை­க­ளிலும், சீறி வந்த துப்பாக்கிக் குண்­டு­க­ளிலும், கடற்­ப­ரப்பில் இருந்து பாய்ந்து வந்த பீரங்கிக் குண்­டு­களும் உடல்­களைப் பிய்த்­தெ­றிந்து மக்களை சின்னா­பின்­ன­மாக்­கி­யதால் சித­றிய உடற்­பா­கங்­களைப் பொறுக்கி எடுத்து ஒன்­றாக்கி, பாதிப்­பு­களில் இருந்து உயிர்­தப்­பி­ய­வர்­க­ளினால் ஓர் அடக்க நிகழ்வை செய்ய முடி­யாமல் இருந்­தது.

இறந்­த­வர்கள் போக மிஞ்­சி­ய­வர்கள் உயிர்­களைக் காத்துக்கொள்வதற்­காக ஓடித்­தப்ப வேண்­டிய நிர்ப்­பந்தம். இதனால் படு­கா­ய­ம­டைந்து குற்­று­யி­ராகக் கிடந்­த­வர்­க­ளையும் கூட கண்டகண்ட இடங்­களில் கைவிட்டுச் செல்­கின்ற அவல நிலைமை. கல்­நெஞ்சம் கொள்ள வேண்­டிய அந்தத் தரு­ணங்­க­ளுக்கு ஆளாகித் தவித்­த­வர்­களின் துய­ரங்­களை எழுத்தில் வடிக்க முடி­யாது.

இரத்த உற­வு­க­ளையும், உற்­ற­வர்­க­ளையும் அநி­யா­ய­மாக சாகக் கொடுத்த துயரம் ஒரு­பக்கம்.

இறுதி நேரத்தில் அவர்­க­ளுக்குச் செய்ய வேண்­டிய உத­வி­க­ளையோ அல்­லது அவர்­க­ளுக்கு செய்ய வேண்­டிய மரி­யா­தை­க­ளையோ செய்ய முடி­யாமல் போய்­விட்­டதே என்ற மாளாத் துன்பம் பாதிக்கப்­பட்டோரின் மனங்­களில் மண்­டிக்­கி­டக்­கின்­றன. இந்தத் துய­ரங்கள் அவர்­களைத் துரத்தித்துரத்தி வாட்டி எடுக்­கின்­றன.

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் என்­பது முழுக்க முழுக்க உளவியல் சார்ந்­தது. ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட ஓர் ஒழுங்­க­மைப்பில் ஆர­வா­ர­மின்றி அமை­தி­யான முறையில் ஆன்­மீக சிந்­த­னை­யோடு அனுட்­டிக்­கப்­பட வேண்­டி­யது. அத்­த­கைய ஒழுங்­க­மைப்பு கடந்த பத்து வரு­டங்­களில் ஒரு தட­வை­யேனும் நினை­வேந்­தலை ஒழுங்கு செய்­த­வர்­க­ளினால் செய்­யப்­ப­ட­வில்லை. வவு­னி­யாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்­வுகள் முதன் முத­லாக எதிர்ப்பு­க­ளுக்கும், இரா­ணுவ, புல­னாய்­வா­ளர்­களின் அச்சுறுத்தலுக்கு மத்­தியில் உணர்­வு­பூர்­வ­மாக முன்னெடுக்கப்பட்டது.

அச்­ச­மான சூழலில் முன்­னெ­டுக்­கப்­பட்ட அந்த நினை­வேந்­தல்கள் பாதிக்­கப்­பட்ட மக்கள் மனங்­க­ளிலும், ஏனை­யோரின் மனங்களிலும் சிறி­த­ளவு ஆறு­தலைத் தந்­தன.

அச்­சு­றுத்­த­லையும் மீறி அனுட்­டிக்­கப்­பட்ட நினை­வேந்தல் நிகழ்வுகளில் பங்­கேற்­ற­தற்­காக இரா­ணு­வத்­தி­னரும், புலனாய்வாளர்­களும் தேடி வரு­­வார்­களோ, தேடி வந்து என்னென்ன செய்­வார்­களோ என்ற அச்சம் கவிழ்ந்த மனநிலையில் நிகழ்­வு­களில் கலந்து கொண்­ட­வர்கள்  நிம்­மதி இழந்து தவிக்க நேர்ந்­தி­ருந்­தது.  இந்த நிம்­ம­தி­யற்ற நினை­வேந்­த­லினால், முள்ளிவாய்க்கால் நினை­வேந்தல் என்­பது ஆறு­த­ல­ளிப்­ப­தா­கவோ அவ­ல­மாகக் கொல்­லப்­பட்­ட­வர்­களின் ஆத்மசாந்­திக்­காக மன­தாரப் பிரார்த்­தனை செய்து மன­மா­றவோ அவர்­களில் எவ­ராலும் முடியவில்லை.

அந்த நினை­வேந்­தல்­களில் கலந்து கொண்டால் இராணுவத்தினராலும், புல­னாய்வு பிரி­வி­ன­ராலும் தங்­க­ளுக்கு எந்தெந்த வகையில் என்­னென்ன தீங்கு நேருமோ, என்று நெஞ்சம் கலங்­கிய நிலையில் முள்­ளி­வாய்க்கால் துய­ரந்­தோய்ந்த நெஞ்சம் கொண்ட பலரும் வீடு­களில் ஏங்கித் தவித்து வீடு­களில் முடங்கிக் கிடந்­த­துண்டு. இந்த அவல நிலைமை அர­சியல் உரி­மைக்­காகப் போராடி, பயங்­க­ர­வா­திகள் என பெயர் சூட்­டப்­பட்டு முள்ளிவாய்க்கால் வரையில் அடித்து நொறுக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கே நேர்ந்­தி­ருந்­தது. இந்த அவ­லத்­தி­னதும், துய­ரத்­தி­னதும் அள­வையும் வேத­னை­யையும் எவ­ராலும் எடுத்­து­ரைத்து விளக்கிக் கூற முடியாது.

யுத்தம் முடி­வ­டைந்த 2009 ஆம் ஆண்டின் பின்னர் முள்ளிவாய்க்காலுக்குச் செல்­வ­தற்கு எவ­ரையும் அர­சாங்கம் உடனடி­யாக அனு­ம­திக்­க­வில்லை.இதனால் இரத்­தத்தில் தோய்ந்த அந்த மண்­ணுக்குச் சென்று தமது உற­வி­னர்­களும் உற்­ற­வர்­களும் உயி­ரி­ழந்த இடங்­களை நேரில் தரி­சித்து மன ஆ­று­தலடைவதற்கான சந்­தர்ப்­பமும் நீண்ட கால­மாக அவர்­க­ளுக்குக் கிடைக்­க­வில்லை.

முள்­ளி­வாய்க்­காலில் மீள்­கு­டி­யேற்றம் அனு­ம­திக்­கப்­பட்டு,மக்கள் அங்கு சென்­று­வ­ரு­வ­தற்­கான அனு­மதி வழங்­கப்­பட்ட தருணங்களும், அங்கு சென்­ற­வர்கள் எங்­கெங்கு செல்­கின்­றார்கள், என்­னென்ன செய்­கின்­றார்கள், யார்­யா­ரோடு கதைக்­கின்­றார்கள் என்று கண்­கா­ணிப்­ப­தற்­காக நிழல்­போல தொடர்ந்த இராணுவத்தினரும், புல­னாய்­வா­ளர்­களும் அந்த மக்கள் மனங்களில் மேலும் மேலும் அச்­சத்­தையும் பீதி­யையும் விதைப் பதற்கே வழி­வ­குப்­ப­ன­வாக அமைந்­தி­ருந்­தன.

நினை­வேந்தல் என்­பது மனம் அமை­தி­ய­டை­வ­தற்கும், ஆறுதல் பெறு­வ­தற்­கு­மாக அனுட்­டிக்­கப்­பட வேண்­டி­யது. அது நிர்ப்பந்தமான நிலை­யிலோ அச்­சு­றுத்­த­லான ஓர் உள­வியல் சூழலிலோ அனுட்­டிக்­கப்­பட முடி­யா­தது. அத்­த­கைய நிகழ்­வு­களை நினை­வேந்தல் என்று வரை­ய­றுக்­கவோ வகுத்துக் கூறவோ முடியாது. அவ்­வா­றான செயற்­பா­டுகள் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை இம்­சிக்­கவும், கொடூ­ர­மாகக் கொடு­மைப்­ப­டுத்­த­வுமே உதவும் எனலாம்.

முதன் முத­லாக முள்­ளி­வாய்க்­கா­லி­லேயே முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வை வட­மா­கா­ணத்தின் முன்னாள் முதலமைச்சர் நிகழ்த்­தி­ய­போது, முள்­ளி­வாய்க்­காலில் பாதிக்கப்பட்­ட­வர்கள் எவரும் பங்­கேற்­றி­ருக்­க­வில்லை என்றே கூற வேண்டும். மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களும், அவர்­களைச் சார்ந்தவர்­க­ளுமே அங்கு கூடி­யி­ருந்­தார்கள். அந்த நிகழ்வு முழுக்கமுழுக்க அர­சியல் மய­மான ஒரு நிகழ்­வா­கவும், ஒரு சம்பிரதாய நிகழ்­வா­க­வுமே நடந்­தே­றி­யது.. தொடர்ந்து அங்கு இடம்­பெற்ற நினை­வேந்தல் நிகழ்­வு­களும் கட்சி அர­சியல் நிழல் படிந்­த­தா­கவும், அர­சியல் மய­மா­ன­தா­க­வுமே ஒழுங்கமைக்கப்பட்டி­ருந்­தன.

ஓர் உணர்வு பூர்­ வ­மான பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு ஆறுதல் அளிக்க­வல்ல புனி­த­மா­ன­தொரு நினை­வேந்தல் நிகழ்­வாக அந்த நிகழ்­வு­களை ஒழுங்­க­மைப்­ப­தற்கு எவ­ரா­லுமே முடி­யாமல் போனது. இது முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலின் சோக­மான ஒரு பக்கம்.

போட்டி நிகழ்­வாகிப் போன நினை­வேந்தல்

வட­மா­காண சபையின் பொறுப்பில் இருந்த முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்­வொ­ழுங்­குகள் முன்னாள் போரா­ளிகள் மற்றும் யாழ்.­பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் வரு­கை­யோடு ஒரு போட்டி நிகழ்­வாக மாறிப்­போ­னது. முன்னாள் போரா­ளிகள் மாவீரர் நாள் நிகழ்­வொ­ழுங்கின் அனு­ப­வத்­தோடும், பொறுப்புரிமை­யோடும் பங்­கெ­டுத்து அதனைச் சிறப்­பிக்க முயன்ற போதிலும், மேலாண்மை மனப்­பாங்­குடன் பங்­கேற்­றி­ருந்த பல்கலைக்­க­ழக மாண­வர்கள் அந்த நிகழ்வை முழு­மை­யாக ஆக்­கி­ர­ மித்­தி­ருந்­தார்கள்.

ஒழுங்­க­மைப்­புக்கள் அவர்­களின் சுய­வி­ருப்­பத்தின் பேரி­லேயே இடம்பெற்றி­ருந்­தன. வட­மா­கா­ண­ ச­பையும் அந்த நினை­வேந்தல் காட்­சியில் இருந்து ஒதுங்க வேண்­டிய நிலையில், பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் விருப்பு வெறுப்­புக்குட்­பட்டு முன்னாள் முதலமைச்­சரும் நிகழ்வில் ஒரு பொம்­மை­யைப் போன்று பங்கேற்­கின்ற நிலைமை உரு­வா­கி­யி­ருந்­தது.

இந்த அம­ளி­க­ளுக்­கி­டையில் நினை­வேந்தல் நிகழ்­வு­களில் மனமொ­ரு­மித்து பங்­கேற்க வேண்­டிய, உண்­மை­யா­கவே முள்ளிவாய்க்­காலில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களும் அந்த ஒப்பேற்றலுக்கான நிகழ்­வ­களில் மனம் ஒட்­டியும் ஒட்­டாத நிலையில் பங்­கேற்க நேர்ந்­தி­ருந்­தது.

இறு­தி­யாக நடை­பெற்ற இந்த நினை­வேந்தல் நிகழ்வு பலதரப்பட்ட­வர்­க­ளி­னதும் கார­சா­ர­மான விமர்­ச­னங்­க­ளுக்கும் கண்ட­னத்­திற்கும் ஆளா­கி­யது. அடுத்த நினை­வேந்தல் நினைவாகிய பத்தாம் ஆண்டு நிகழ்வு ஒரு பொது அமைப்­பினால் நேர்த்­தி­யாக ஒழுங்கு செய்­யப்­பட வேண்டும் என்ற தீர்க்­க­மான முடிவை மேற்­கொள்­வ­தற்கு வழி­வ­குத்­தி­ருந்­தது.

உள்ளூர்வாசிகளான முள்­ளி­வாய்க்கால் மற்றும் அதனைச் சூழ்ந்த கிரா­மங்­களைச் சேர்ந்த மக்­களின் பங்­க­ளிப்­பின்­றியே முள்ளிவாய்க்காலில் இடம்­பெற்ற நினை­வேந்தல் நிகழ்­வுகள் நடந்தேறி முடிந்­தன.

பத்தாவது முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் என்­பது சிறப்­பா­கவும் சீரான முறை­யிலும் ஒழுங்­க­மைக்­கப்­பட்டு, பலதரப்பட்டவர்களினதும் பங்­க­ளிப்­புடன் நேர்த்­தி­யாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற வைராக்­கி­யத்தை உரு­வாக்­கி­யி­ருந்­தது.

ஆனால், கொழும்­பையும் மட்­டக்­க­ளப்­பையும் மையப்­ப­டுத்­திய உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளினால், நிலை­கு­லைந்­து­போன நாட்டின் பாது­காப்பு நிலை­மைகள், முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­த­லுக்­கான ஏற்­பா­டு­களைப் பற்றிச் சிந்­திக்­கக்­கூட முடி­யாத அள­வுக்கு மோச­மா­கிப் ­போயின.

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலின் மூலம் விடு­த­லைப்­பு­லிகள் மீண்டும் எழுச்சி பெற்று விடு­வார்கள் என்ற கற்­ப­னா­வாத கருத்­தியல் கார­ண­மா­கவே, அதனை சுதந்­தி­ர­மான முறையில் அனுட்­டிப்­ப­தற்கு அர­சாங்கம் மறுத்­தி­ருந்­தது. தமிழ் மக்­களின் போராட்ட வர­லாற்றை நினைவில் தேக்கி, போர்க்­குற்றச் செயல்­க­ளுக்கு அரசு பொறுப்பு கூறியே ஆக வேண்டும் என்ற கோரிக்­கையை தமிழ் மக்கள் சோர்வின்றி நீண்டகாலத்திற்கு வலியுறுத்தி தொல்லை கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வழங்கிவிடும் என்ற எண்ணமும் இந்த அனுமதி மறுப்புக்குப் பின்னணி காரணமாகத் தெரிகின்றது.

எது எப்படி இருப்பினும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது, ஓர் அரசியல் கலந்த நிகழ்வாகவும் தமிழ் மக்களின் ஆன்மாவைக் கீறிக் குதறிய அந்த நிகழ்வுகளை நினைவேந்தல் வழியாக அடுத்தடுத்த தலைமுறைக்குத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான நிலைக்களனாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

இது தமிழ் மக்களின் அரசியல் உரிமை என்ற ஆன்மீகத்தின் சோர்வடையாத வளர்ச்சி நிலைக்கும் உறுதியானதோர் அரசியல் விடிவுக்கான திறப்பு வாயிலாகவும் கட்டி ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

அது ஆன்மீக, சமூக, அரசியல் சார்ந்த நிகழ்வாக வாழையடிவாழையாகத் தொடர்ந்து பின்பற்றி நினைவேந்தப்படுத் தக்கவகையில் கட்டமைக்கப்பட வேண்டும். அது ஒரு வழி நிகழ்வாகவோ அல்லது ஒரேயொரு முறையிலானதாகவோ அமையாமல் தமிழ் சமூகத்தின் பல்வேறு கிளைகளில் ஊறித் திளைக்கின்ற பன்முக முறையிலானதாக உருவாக்கப்பட வேண்டும்.

அதற்குரிய உறுதியான தீர்மானத்தைப் பலதரப்பட்டவர்களும் ஒன்றிணைந்து மேற்கொள்வதற்கான அடித்தளத்தை இடுவதாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பத்தாவது நிகழ்வு அமைய வேண்டும்.

பி.மாணிக்கவாசகம்