“ஐ.தே.க. உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடிதம்”!

321 0

ஐக்கிய தேசிய கட்சியின் வெலிகம நகர சபை தலைவர் ரேஹான் டீ. விஜயரத்ன ஜயவிக்ரம மீது ஒருக்காற்று நடவடிக்கை எடுக்க கோரி அந்த கட்சியின் பொது செயலாளர் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்துக்கு ஐ.தே.க நகர சபை தலைவர்கள் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க வெலிகம நகர சபை தலைவர் ரேஹான் டீ. விஜயரத்ன ஜயவிக்ர முயற்சிப்பதாகவும் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி எதிர் அணியினரது அவாவை நிறைவேற்ற அவர் செயற்படுவதாகவும் அந்த கடிதத்தில் வெலிகம நகர சபை தலைவர் மீது குற்றசாட்டு முன்வைகக்ப்படடுள்ளது.