தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

415 0

77461729913406804522இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்ட 13 தமிழக மீனவர்களையும் தொடர்ந்தும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்

இந்த 13 மீனவர்களும் இன்று விசாரணைக்காக மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இவர்கள் கடந்த மே மாதம் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment