வன்­மு­றையில் ஈடு­ப­டு­ப­வர்கள் மீது துப்­பாக்­கிச்­சூடு நடத்த வேண்டும்- ரவூப் ஹக்கீம்

303 0

ஊர­டங்குச் சட்டம் அமு­லி­லுள்ள நிலையில், அத­னையும் மீறி வன்­மு­றை­களில் ஈடு­படும் கல­கக்­கா­ரர்கள் மீது துப்­பாக்­கிச்­சூடு நடத்­து­மாறு வலி­யு­றுத்­தியுள்ளோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்­துள்ளார்.

குரு­நாகல் மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் இடம்பெற்­றுள்ள நிலையில், பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வது தொடர்­பான உயர்­மட்ட கலந்­து­ரை­யா­டல்கள் அலரிமாளிகை மற்றும் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்­தி­லுள்ள விசேட நட­வ­டிக்கை பிரிவு ஆகி­ய­வற்றில் நேற்­று­முன்­தினம் இரவு நடை­பெற்­றன.

இக்­க­லந்­து­ரை­யா­டல்­களில் கலந்­து­கொண்­டபின் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கும்­ போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும், குரு­ணாகல் மாவட்­டத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­முறை சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. குரு­ணாகல் மாவட்­டத்தில் ஹெட்­டி­பொல, அனுக்­கன, கொட்­டம்­பிட்­டிய, குளி­யாப்­பிட்­டிய, மடிகே, நிக்­க­வ­ரெட்­டிய, நாத்­தாண்­டிய உள்­ளிட்ட பல பிர­தே­சங்­க­ளிலும் கம்­பஹா மாவட்­டத்தில் மினு­வாங்­கொடை பிர­தே­சத்­திலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­முறை சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன.

உட­ன­டி­யாக பிர­த­ம­ருடன் தொடர்­பு­கொண்டு, எடுக்­க­வேண்­டிய பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் குறித்து அலரிமாளி­கையில் கலந்­து­ரை­யா­டினோம். பிர­தமர் தலை­மையில் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர், சட்­டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், முப்­ப­டை­களின் கூட்டுத் தலைமை பொறுப்­ப­தி­காரி ஆகியோர் இக்­க­லந்­து­ரை­யா­டலில் கலந்­து­கொண்­டனர்.

அசம்­பா­வி­தங்கள் இடம்­பெற்ற பகு­தி­களில் பாது­காப்பை பலப்­ப­டுத்­து­வ­தற்­காக இரா­ணுவம் மற்றும் முப்­படை வீரர்­களை கட­மையில் ஈடு­ப­டுத்­து­வ­தற்கும் அவ­ச­ர­கால சட்­டத்தின் பிர­காரம் கல­கக்­கா­ரர்கள் மீது எடுக்­க­வேண்­டிய நட­வ­டிக்­கைகள் குறித்து இதன்­போது ஆரா­யப்­பட்­டன. அத்­துடன் அசம்­பா­வி­தத்தில் ஈடு­பட்­ட­வர்கள் மீது கண்ட இடங்­களில் சுடு­க­லங்­களை பாவிப்­ப­தற்கு உத்­த­ரவு வழங்­கு­மாறு நாங்கள் வலி­யு­றுத்­தி­யுள்ளோம்.

இதன்­பின்னர், பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நிறு­வப்­பட்­டுள்ள நட­வ­டிக்கை அறையில் உயர்­மட்ட பாது­காப்பு பற்­றிய கலந்­து­ரை­யாடல் நடை­பெற்­றது.

இதில் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க, பாது­காப்பு பதில் அமைச்சர் ருவன் விஜ­ய­வர்­தன, அமைச்­சர்­க­ளான நளின் பண்­டார, அகி­ல­விராஜ் காரி­ய­வசம், மலிக் சம­ர­விக்­கி­ரம, பாது­காப்பு அமைச்சின் செய­லாளர், முப்­ப­டை­களின் கூட்டுத் தலைமை பொறுப்­ப­தி­காரி, முப்­படைத் தள­ப­திகள், பொலிஸ் மா அதிபர் உள்­ளிட்டோர் கலந்­து­கொண்­டனர்.

பல இடங்­க­ளி­லி­ருந்து கிடைக்கப்­பெறும் தக­வல்­களை திரட்டி, அதற்கு மேற்­கொள்ள வேண்­டிய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் இதன்­போது கலந்­து­ரை­யா­டப்­பட்­டன. இந்த அசம்­பா­வி­தங்கள் வேறு பகு­தி­க­ளுக்கும் பர­வு­வ­தற்­கான சாத்­தி­யங்கள் தென்­பட்ட நிலையில், நாட­ளா­விய ரீதியில் ஊட­ரங்குச் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­மாறு கூறினோம்.

ஊர­டங்குச் சட்டம் அமு­லி­லுள்ள நிலையில், அத­னையும் மீறி வன்­மு­றை­களில் ஈடு­படும் கல­கக்­கா­ரர்கள் மீது கடு­மை­யான நட­வ­டிக் கைகள் எடுக்­கப்பட வேண்­டு­மென வலி­யு­றுத்­தினோம் என அமைச்சர் குறிப்பிட்டார்.