ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

288 0
மட்டக்குளிய, சமித்புர பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளிய பொலிஸ நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

இதன்போது சந்தேகநபரிடமிருந்த 504 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

55 வயதுடைய மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், மட்டக்குளிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.