ரயிலுடன் மோதி யானை பலி

268 0

கல்ஓயா – ஹிங்குராங்கொடைக்கு இடையில் ரயிலுடன் மோதி யானையொன்று உயிரிழந்துள்ளது.

கல்ஓயாவில் இருந்து மட்டக்களப்பு வரை பயணித்த இரவு அஞ்சல் ரயிலில் மோதி குறித்த யானை நேற்று  உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

சுமார்10 தொடக்கம்  15 வயது மதிக்கத்தக்க யானையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மின்னேரியா வன விலங்கு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.