நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் ……

360 0

அசாதாரண சூழந்நிலையினை கருத்திற்கொண்டு வடமேல் மாகாணம், கம்பஹா மாவட்டம் தவிர்ந்த ஏனைய பகுதியில் இன்றிரவு 9.00 மணிமுதல் நாளை அதிகாலை 4.00 மணிவரை  பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று 7.00 மணி தொடக்கம் காலை 6.00 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்று மாலை 6.00 மணி தொடக்கம் நாளை காலை 6.00 மணிவரை மீண்டும் வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தப்படுமென பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.