பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஒத்துழைப்புடன் செயற்படுமாறு அமெரிக்கா வலியுறுத்தல்

227 0

பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு ஒத்துழைத்துச் செயற்படுமாறு இலங்கையையும் மாலைதீவையும் அமெரிக்கா வலியுறுத்திக் கேட்டிருக்கிறது. 

 

பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு ஏனைய சகல நாடுகளுடனும் மாலைதீவு ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும்  அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையே முன்னர் நிலவியதையும் விட கூடுதலான ஒத்துழைப்பு தேவைப்படும் நேரம் இது என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள தூதரகத்தினால் நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரைாயற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.