74 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது!

271 0

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் வைத்து 74 கிலோ கிராம் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடமராட்சி கடற்பரப்பில் கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின் போதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

வடமராட்சி கட்டைக்காடு பகுதியை சேர்ந்த 28,35 வயதுடைய நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களின் உடமையில் இருந்து 74 கிலோ கஞ்சாவினை மீட்டதாக கடற்படையினர் பொலிசாருக்கு தகவல் வழங்கியதுடன் கைது செய்த நபர்களை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

சந்தேகநபர்கள் மாவட்ட போதைப் பொருள் குற்ற தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.