வத்தளையில் துப்பாக்கிச் சூடு-ஒருவர் பலி

331 0

வத்தளையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வத்தளை – ஹ_னுபிடிய பிரதேசத்தில் கடற்படையினரின் எச்சரிக்கையை மீறி சென்ற வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கடற்படையினர் இன்று அதிகாலை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வாகனம் ஒன்றை மறித்துள்ளனர்.
இதன் போது, குறித்த வாகனம் கடற்படையினரின் எச்சரிக்கையை மீறி சென்றதை அடுத்து கடற்படையினர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டனர்.

கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் இடம்பெற்று சில மணி நேரத்தின் பின்னர் மற்றொரு வாகனமும் படையினரின் கட்டளையை மீறி செல்ல முற்பட்டபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில், காரின் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.