மாளிகாவத்தையில் 46 வாள்கள் மீட்பு!

392 0

கொழும்பு, மாளிகாவத்தை – கெத்தாராமை பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலொன்றுக்கு அருகிலுள்ள கிணற்றுக்குளிருந்து 46 வாள்களும், கைத்துப்பாக்கியொன்றும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் மீட்க்கப்பட்டுள்ளது.

மேற்படி ஆயுதங்கள் உறையொன்றினுள் இட்டு கிணறொன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தோட்டக்கள் நிரப்பப்பட்ட சிறிய ரக கைத்துப்பககி,  53 கத்திகள், கூரிய ஆயுதங்கள், 25 இருவெட்டுக்கள், ஐஸ் போதைப்பொருள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.இங்கு மேலும் ஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.