தீவிரவாதிகளின் 13 வீடுகள்,41 வங்கிக் கணக்குகளும் கண்டுபிடிப்பு- சிறிசேன

588 0

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய தீவிரவாதிகளின் 13 வீடுகளும் 41 வங்கிக் கணக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட  தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் இருந்த பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

அத்தோடு தற்கொலை குண்டுதாக்குதலுடன் தொடர்புடையோர் எனும் சந்தேகத்தில் பலர் பொலிஸாரல் கைது செய்யப்பட்டு வருவதோடு,தீவிராவாதிகளின் வங்கி கணக்குகள் மற்றும் அவர்களின் வீடுகள் என்பன கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.