முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து ஒட்டப்பிடாரம் தொகுதியில் இன்று மாலை பிரசாரம் செய்கிறார்.
ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்களிடையே 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

