பொய் பிரச்சாரம் செய்தமை தொடர்பில் பியல் நிஷாந்தவிடம் 5 மணிநேர விசாரணை

396 0

இன்று காலை வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவிற்கு சென்றிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த, சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளார்.

சுமார் 5 மணி நேர விசாரணைகளின் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியின் போது பொய் பிரச்சாரம் ஒன்றை வெளியிட்டதற்காகவே அவர் இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.