மாமியை கொன்ற மருமகனுக்கு கடூழிய சிறை

312 0

800022b9384d94863484434cc5b62e0be04காரைநகர் பிரதேசத்தில் மாமியாரை தாக்கி கொலை செய்த மருமகனுக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இன்று இந்த தீர்ப்பை வழங்கினார்.

கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றது.

77 வயதான தனது மாமியாரை, கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தி, அவருடைய மருமகனுக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த கொலை திட்டமிட்டு மேற்கொள்ளவில்லை என்றும், இறந்தவருடைய வயது, சம்பவம் நடைபெற்ற சூழ்நிலை என்பவற்றை கருத்தில் கொண்டும் தீர்ப்பு வழங்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.