சம்மாந்துறை, சவளக்கடை, கல்முனை பகுதிகளில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!

390 0

சம்மாந்துறை, சவளக்கடை மற்றும் கல்முனை பகுதிகளில் இன்று (30.04.2019) இரவு 8 முதல் நாளை (01.05.2019) காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதுள்ள நிலையை கருத்திற்கொண்டு, பாதுகாப்பின் நிமித்தமே மேற்படி ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.