கிளிநொச்சியில் பெண்களை விழிப்புணர்வூட்ட வீதி நாடகங்கள்(காணொளி)

375 0

kilinochchi-dramaகிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் சமூகத்தில் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் தொடர்;பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீதி நாடகம் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அன்றாடம் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றன.

குறிப்பாக தொழில் வாய்ப்பின்மை பொருளாதார நெருக்கடி என்பவற்றின் மூலம் அதிக குடும்ப சுமையை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நுண்கடன் நிதி நிறுவனங்கள் அதிகூடிய வட்டி வீதங்களில் கடன்களை வழங்கி அவர்களை மேலும் சுமைகளுக்குள் தள்ளுதல், பெண் தலைமைத்துவக் குடும்பங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பாலியல் ரீதியான தொல்லைகள் போன்றவற்றிலிருந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தியன் நிதியுதவிடன் கிளிநொச்சி அரங்க செயற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இத்தெருவொளி நாடகம் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி மலையாளபுரம், பொன்னகர் போன்ற பகுதிகளில் குறித்த நாடகம் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.