ஜனாதிபதியின் மகன் தொடர்புபடுத்தப்பட்ட காணொளி தொடர்பில் விசாரணை

319 0

car-1-1கொழும்பில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள காணொளி தொடர்பில் பூரண விசாரணை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

ஊடக பிரதி அமைச்சுர் கருணாரத்ன பரணவிதான இதனைத் தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் தற்போது ஜனாதிபதியால் காவற்துறையினருக்கு இது தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் மகன் தஹம் சிறிசேனவும் மேலும் சிலரும் குறித்த விடுதியில் இடம்பெற்ற தாக்குதலில் தொடர்பு கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளி தொடர்பிலேயே இந்த விசாரணை இடம்பெறவுள்ளது.