தந்தை செல்வாவின் நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு.

418 0

இலங்கைத் தமிழரசுக கட்சியின் ஸ்த்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் 42 ஆவது நினைவு தினம், மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் உருவச் சிலை வளாகத்தில் இன்று இடம்பெற்றது.

தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் க.துரைராசசிங்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களாக மா.நடராசா, பி.இந்திரகுமார், வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன், மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், வாலிபர் முன்னணியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.