சிறுத்தை புலி தாக்கியதில் இருவர் வைத்தியசாலையில்

342 0

பொகவந்தலாவ சினாகலை டி.பி பிரிவில் 03ம் இலக்க தேயிலை மலையில் பணிபுரிந்து கொண்டிருந்த இரண்டு ஆண் தொழிலாளர்களை  சிறுத்தை புலிதாக்கியதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தேயிலை மலையில் தொழில்புரிந்து கொண்டிருந்து தொழிலாளர் ஒருவரின் வளர்ப்பு நாய் ஒன்றினை குறித்த சிறுத்தை புலி தாக்கி கொண்டிருந்த வேலை குறித்த நாயினை இரண்டு தொழிலாளர்களும் காப்பாற்ற முயற்சித்த போது கோபம் அடைந்த சிறுத்தை புலி இரண்டு ஆண் தொழிலாளர்களை தாக்கியதில் ஒருவருக்கு முகம் மற்றும் உடம்பு பகுதியிலும் மற்றுமொரு தொழிலாளருக்கு உடம்பு மற்றும் கால் கை பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பலத்த காயங்களுக்குள்ளான இரண்டு தொழிலாளர்களும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் இருந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு மேலதிக சிகிச்சைக்காக குறித்த இருவரும் நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றபட்ட போது இதில் ஒருவர் கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.