சந்தேகத்தின் பேரில் கிளிநொச்சியில் 6 பேர் கைது

381 0

நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 6 பேர் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவர்கள் வர்த்தகர்களாக செயற்பட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.