மட்டு.வில் தற்கொலை குண்டுதாரியின் தாயார் காத்தானகுடியில் கைது

295 0

மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத் அல்லது றில்வான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்திய நபரை, அவரின் தாயார் அடையாளம் காண்பித்துள்ளதாகவும் தாயாரை நேற்று  இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் தொடர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த தற்கொலை குண்டுதாரி தொடர்பாக றில்வானின் உறவினர்களால் இவர் றில்வான் தான் என அடையாளம் காணப்படமாமல் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில நேற்று (வியாழக்கிழமை) இரவு புதிய காத்தான்குடி 4ஆம் குறுக்கு ஒழுங்கையிலுள்ள றில்வானின் தாயாரின் வீட்டை சி.ஜ.டியினர் முற்றுகையிட்டு அவரிடம் தற்கொலை குண்டு தாரியின் ஒளிப்படத்தை காட்டியபோது அவருவடய மகன் என அடையாளம் காட்டியுள்ள நிலையில் அவரை கைது செய்துள்ளனர்.

குறித்த குண்டு தாரி கல்முனையில் திருமணம் முடித்துள்ளதாகவும் தெமட்டகொடையில் வசித்துவந்துள்ளதாகவும் சி.ஜ.டி.யினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மேலதிக விசாரணைகளை சி.ஜ.டியினர் முன்னெடுத்து வருகின்றனர்.