தீவிரவாதிகளின் சடலங்களை பொறுப்பேற்க மாட்டோம்-உலமா சபை

575 0

கடந்த 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எமது இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையெனத் தெரிவித்த, அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் த​லைவர் ஆஷிக் ரிஸ்வி, உயிரிழந்தவர்களின் சடலங்களை நாம் ஒரு போதும் பொறுப்பேற்க மாட்​டோம் என்றும் தெரிவித்தார்.

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா தலைமையகத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் ​தெரிவித்தப் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.