மட்டக்குளி மோதரை பகுதியில் இன்று இடம்பெற்ற சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சுற்றி வளைப்பின் போது 21 கைக்குண்டுகளும் 6 வாள்களும் விஷேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.