தென்னிலங்கையில் பேருந்து ஒன்றினுள் மர்மப்பொதி!

258 0

தென்னிலங்கையின் அம்பலாந்தோட்டையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை விசேட அதிரடிப் படையினர் சோதனை செய்து வருகின்றனர்.

பேருந்தில் பயணித்தவர்கள் அனைவரும் வெளியேற்றிவிட்டு இந்த சோதனை தற்போது நடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் கடும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு திடீர் சோதனைகள் இடம்பெற்றுவருவதால் மக்கள் அதுகுறித்து அச்சப்படத்தேவையில்லை என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.