வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் தீ

359 0

firec_8வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் அலுவலக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மின்சாரக் கோளாறே இந்த தீ விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செட்டிக்குளம் பொலிஸார், மின்சார சபை ஊழியர்கள் மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.