அநுராதபுரத்திலுள்ள பாடசாலைக்கு முன்னால் கைக்குண்டு மீட்பு

286 0

அநுராதபுரம் – ரம்பேவ – கோனேவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்னால் வீதியோரத்திலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

போலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டுள்ள கைக்குண்டை செயலிழக்கச் செய்ய வெடிகுண்டு செயலிழக்க செய்யும் பிரிவினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வெள்ளவத்தையிலும் சந்தேகத்திற்க இடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் பைக்கின் ஆசனத்தை திறப்பதற்காக மோட்டார் சைக்கிள் பாதுகாப்புப் படையினரால் வெடிக்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.