யாழ் தனியார் பஸ் நிலையத்தில் தீ (UPDATE)

480 0

யாழ்ப்பாணம் தபால் கந்தோர் வீதியிலுள்ள பழைய தனியார் பேருந்து நிலையத்திற்கு இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த பேருந்து நிலையத்திலிருந்து நேரக் காப்பாளரின் பிரத்தியேகக் கூடு தீப்பற்றி எரிந்துள்ளது.

இன்று இரவு 07 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து, ஸ்தலத்திற்கு வருகைதந்த யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு  படையினர் தீயைக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.