யாழில் இரு முஸ்லிம் இளைஞர்கள் கைது

472 0

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்து, யாழ்ப்பாணத்தில் இரு முஸ்லிம் இளைஞர்கள், கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இன்று பிற்பகல் 06.30 மணியளவில் தொழுகை நிறைவடைந்த நிலையில், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு குறித்த இரு இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.